வாஜ்பாய் பிறந்தநாள்: கிணத்துக்கடவில் நல்லாட்சி தினமாக கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக இன்று கொண்டாடப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக இன்று கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாகக் கோவை தெற்கு மாவட்ட கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் கோவில்பாளையம் காளியண்ணன்புதூரில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தன தனபாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த விழாவில் முன்னதாக வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.



இதனை அடுத்து பட்டியலின சிறுவர் சிறுமியர்களுக்கு நோட்டுப்புத்தகம் பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் சுந்தர் ராஜு உள்ளிட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...