கோவையில் ஏற்பாடு செய்யப்படும் குறு-சிறு தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நாராயண் ரானே உறுதியளித்துள்ளார்.
கோவை: கோவையில் ஏற்பாடு செய்யப்படும் குறு, சிறு தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நாராயண் ரானே உறுதியளித்துள்ளார்.
லகு உத்தியோக பாரதி தேசிய இணை பொது செயலாளர் மோகனசுந்தரம், தேசிய துணை தலைவர் ஹரிஹரன், மாநில தலைவர் விஜயராகவன், மாநில இணை பொது செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய குழு நேற்று முன்தினம் டில்லியில் குறு, சிறு மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான அமைச்சகத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே அவர்களை சந்தித்து குறு, சிறு நிறுவனங்களுக்கான தற்போதைய முக்கிய கோரிக்கையான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தி சிறு தொழில் வளர்ச்சி கழகம் மூலம் அரசு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்றது.
மேலும், கடன் சார்ந்த முதலீடு மானியம் (சி.எல்.சி.எஸ்.எஸ்), வட்டி சமநிலை திட்டங்களை கால நீட்டிப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான விலை மாறுபாடு விதி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட மேலும் முக்கியமான கோரிக்கைகளை அமைச்சர் மற்றும் துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும் இதை கவனமுடன் கேட்டு கொண்டு ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் தமிழகம் வருமாறு மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் அதற்கு இசைந்துலகு உத்தியோக பாரதி அமைப்பின் சார்பில் வரும் மாதங்களில் கோவையில் ஏற்பாடு செய்யப்படும் குறு, சிறு தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொள்ள உறுதி அளித்திருக்கிறார்கள்.
லகு உத்தியோக பாரதி தேசிய இணை பொது செயலாளர் மோகனசுந்தரம், தேசிய துணை தலைவர் ஹரிஹரன், மாநில தலைவர் விஜயராகவன், மாநில இணை பொது செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய குழு நேற்று முன்தினம் டில்லியில் குறு, சிறு மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான அமைச்சகத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே அவர்களை சந்தித்து குறு, சிறு நிறுவனங்களுக்கான தற்போதைய முக்கிய கோரிக்கையான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தி சிறு தொழில் வளர்ச்சி கழகம் மூலம் அரசு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்றது.
மேலும், கடன் சார்ந்த முதலீடு மானியம் (சி.எல்.சி.எஸ்.எஸ்), வட்டி சமநிலை திட்டங்களை கால நீட்டிப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான விலை மாறுபாடு விதி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட மேலும் முக்கியமான கோரிக்கைகளை அமைச்சர் மற்றும் துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும் இதை கவனமுடன் கேட்டு கொண்டு ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் தமிழகம் வருமாறு மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் அதற்கு இசைந்துலகு உத்தியோக பாரதி அமைப்பின் சார்பில் வரும் மாதங்களில் கோவையில் ஏற்பாடு செய்யப்படும் குறு, சிறு தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொள்ள உறுதி அளித்திருக்கிறார்கள்.