கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6-வயது சிறுமி ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் பாலு. இவருடைய மகள் ரித்திகா (6). இவருக்குக் கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவருடைய பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காகக் கடந்த 22-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை குழந்தைகள் நலச் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் பாலு. இவருடைய மகள் ரித்திகா (6). இவருக்குக் கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவருடைய பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காகக் கடந்த 22-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை குழந்தைகள் நலச் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.