நீண்ட நாள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு தலைமையகத்தில் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நீண்ட நாள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.


கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு தலைமையகத்தில் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் கூடியது. தலைமை நிர்வாகக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



நீண்டகால சிறைவாசிகள் விடுதலைக்குப் பரிந்துரை குழு: நீண்டகாலமாகச் சிறையில் வாடும் சிறைவாசிகளின் நிலை மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்து மிகுந்த அக்கறையோடு நிர்வாக குழு விவாதித்தது. கடந்த காலங்களில் சிறைவாசிகளின் முன் விடுதலையின் போது, முஸ்லிம் கைதிகள் பாரபட்சம் காட்டப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட அவலநிலை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து அவர்களின் நன்னடத்தை, உடல் நிலை, மன நிலை, உடல் ஆரோக்கியம், தற்போது உள்ள சூழ்நிலை என அனைத்தும் அறியும் வகையில் முன் விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை நிர்வாக குழு வரவேற்கிறது.

தமிழக அரசு அமைத்துள்ள இந்த குழுவின் கால வரம்பை அதிக பட்சம் மூன்று மாதங்களுக்குள்ளாக என்று நிர்ணயிக்க வேண்டும் என்றும் இந்த ஆணையத்தின் கால வரம்பு முடிவடைந்து பரிந்துரைகள் வரும் வரை 60 வயதைக் கடந்த வயது முதிர்ந்த, மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு நீண்ட நாள் பரோல் அளிக்கப் பட வேண்டும் என்றும் தலைமை நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.

பெண்களின் திருமண வயது: ஒன்றிய பாஜக அரசு பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தியிருப்பது முற்றிலும் மோசடியான, திசைதிருப்பும் செயலாக உள்ளது. 18 வயது வாக்களிப்பதற்கும், ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கும் தகுதியானதாக உள்ளபோது, திருமணத்திற்குத் தகுதியில்லை என்றாக்குவது, பெரும்பான்மையான மக்களைக் குற்றவாளிகளாய் ஆக்கும் நோக்கில் உள்ளது .என நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது.

உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...