அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் ஒடை சேற்றில் சிக்கிய பசுமாடு 4-நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. இதையடுத்து, மாடு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து சிகிச்சையளித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவிநாசி: அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் ஒடை சேற்றில் சிக்கிய பசுமாடு 4- நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
அவிநாசி அருகே நடுவச்சேரி ராயம்பாளையம் ஒடை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று கடந்த திங்கள்கிழமை சேற்றில் சிக்கியது. இந்த மாடை உரிமையாளர் மீட்க இயலாமல் அப்படியே விட்டுச் சென்று விட்டார்.
இந்நிலையில், இதனை பார்த்த அப்பகுதியை ராஜேந்திரன், நான்கு நாட்கள் சேற்றில் இருக்கும் மாட்டை மாட்டை உடனடியாக மீட்குமாறு உரிமையாளர் ஜெயராமிடம் முறையிட்டுள்ளார். அதற்கு ஜெயராமன் மாட்டை உரிய விலை கொடுத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுமாறு ராஜேந்திரனிடம் கூறினார்.
இதை அடுத்து ராஜேந்திரன் மாட்டை வாங்கி பொதுமக்கள் உதவியுடன் மீட்க முயன்றார் முயற்சி தோல்வியுற்றது.

இதை அடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி, வெள்ளிக்கிழமை சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறை, தீயணைப்புத் துறையினர் கிரேன் இயந்திரம் மூலம் சேற்றில் சிக்கிய மாட்டை உயிருடன் மீட்டு முதலுதவி அளித்தனர்.
இதையடுத்து, மாடு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து சிகிச்சையளித்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 4-நாள்களுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய மாடு உயிருடன் மீட்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அவிநாசி அருகே நடுவச்சேரி ராயம்பாளையம் ஒடை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று கடந்த திங்கள்கிழமை சேற்றில் சிக்கியது. இந்த மாடை உரிமையாளர் மீட்க இயலாமல் அப்படியே விட்டுச் சென்று விட்டார்.
இந்நிலையில், இதனை பார்த்த அப்பகுதியை ராஜேந்திரன், நான்கு நாட்கள் சேற்றில் இருக்கும் மாட்டை மாட்டை உடனடியாக மீட்குமாறு உரிமையாளர் ஜெயராமிடம் முறையிட்டுள்ளார். அதற்கு ஜெயராமன் மாட்டை உரிய விலை கொடுத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுமாறு ராஜேந்திரனிடம் கூறினார்.
இதை அடுத்து ராஜேந்திரன் மாட்டை வாங்கி பொதுமக்கள் உதவியுடன் மீட்க முயன்றார் முயற்சி தோல்வியுற்றது.
இதை அடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி, வெள்ளிக்கிழமை சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறை, தீயணைப்புத் துறையினர் கிரேன் இயந்திரம் மூலம் சேற்றில் சிக்கிய மாட்டை உயிருடன் மீட்டு முதலுதவி அளித்தனர்.
இதையடுத்து, மாடு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து சிகிச்சையளித்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 4-நாள்களுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய மாடு உயிருடன் மீட்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.