கோவையில் தனியார் மோட்டார் நிறுவன ஊழியர் ரூ.16 லட்சம் மோசடி; பீளமேடு போலீசார் விசாரணை

புகாரின்பேரில், பீளமேடு போலீசார் வரதராஜன் என்பவர் மீது IPC 408, 420 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சந்தோஷ் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில் விஜயகுமார் (51) ஜெனரல் மேனேஜர் ஆக பணி புரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சரி பார்த்த போது, மோட்டார் உதிரிபாகங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு அதற்குரிய பணம் வரவு வைக்கப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஸ்டோர் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்த கோவை லைட் ஹவுஸ் ரோடு பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் உதிரிபாகங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து, அந்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, விஜயகுமார் பீளமேடு காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வரதராஜன் மீது IPC 408, 420 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...