புகாரின்பேரில், பீளமேடு போலீசார் வரதராஜன் என்பவர் மீது IPC 408, 420 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சந்தோஷ் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில் விஜயகுமார் (51) ஜெனரல் மேனேஜர் ஆக பணி புரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சரி பார்த்த போது, மோட்டார் உதிரிபாகங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு அதற்குரிய பணம் வரவு வைக்கப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஸ்டோர் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்த கோவை லைட் ஹவுஸ் ரோடு பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் உதிரிபாகங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து, அந்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜயகுமார் பீளமேடு காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வரதராஜன் மீது IPC 408, 420 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சரி பார்த்த போது, மோட்டார் உதிரிபாகங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு அதற்குரிய பணம் வரவு வைக்கப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஸ்டோர் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்த கோவை லைட் ஹவுஸ் ரோடு பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் உதிரிபாகங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து, அந்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜயகுமார் பீளமேடு காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வரதராஜன் மீது IPC 408, 420 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.