மகன்கள் இருவரும் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளதால் மனவேதனையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் மன வளர்ச்சி குன்றிய இரு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிதுரை. பிட்டர் ஆக பணிபுரிந்து வரும் இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் விக்னேஷ் (9), ஆகாஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மகன்கள் இருவரும் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இதன் காரணமாக யாராவது ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ராமலட்சுமி வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது சாமிதுரை தனது மகன்களுடன் வீட்டில் இருந்தார். சிறிது நேரம் கழித்து ராமலட்சுமி வீட்டிற்கு வந்தபோது சாமி துரையும் மகன்களும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தனர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இரண்டு மகன்களையும் கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்ற மனவேதனையில் சாமிதுரை இரண்டு மகன்களுக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிதுரை. பிட்டர் ஆக பணிபுரிந்து வரும் இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் விக்னேஷ் (9), ஆகாஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மகன்கள் இருவரும் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இதன் காரணமாக யாராவது ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ராமலட்சுமி வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது சாமிதுரை தனது மகன்களுடன் வீட்டில் இருந்தார். சிறிது நேரம் கழித்து ராமலட்சுமி வீட்டிற்கு வந்தபோது சாமி துரையும் மகன்களும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தனர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இரண்டு மகன்களையும் கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்ற மனவேதனையில் சாமிதுரை இரண்டு மகன்களுக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.