புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ஆர்.எஸ். புரத்தில் போட்டோகிராபர் கார் கண்ணாடியை உடைத்து கேமரா திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வீரகேரளம் அடுத்த ராஜயோக நகர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கார்த்திகேயன் (30). போட்டோகிராபரான இவர் தனது நண்பரின் கேமரா மற்றும் விலை உயர்ந்த 3 லென்ஸ்களை வாங்கிக்கொண்டு பெங்களூருவில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றார்.
இந்நிலையில், நேற்று இரவு கோவை ஆர்எஸ் புரம் டிவி சுவாமி ரோடு பகுதியில் காரை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது காரின் பின்பக்க கதவு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும், உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா மற்றும் மூன்று லென்ஸ்கள் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து, கார்த்திகேயன் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வீரகேரளம் அடுத்த ராஜயோக நகர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கார்த்திகேயன் (30). போட்டோகிராபரான இவர் தனது நண்பரின் கேமரா மற்றும் விலை உயர்ந்த 3 லென்ஸ்களை வாங்கிக்கொண்டு பெங்களூருவில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றார்.
இந்நிலையில், நேற்று இரவு கோவை ஆர்எஸ் புரம் டிவி சுவாமி ரோடு பகுதியில் காரை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது காரின் பின்பக்க கதவு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும், உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா மற்றும் மூன்று லென்ஸ்கள் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து, கார்த்திகேயன் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.