60 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு தனது மகளிடம் ஒப்படைக்குமாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்: திருப்பூரில் 60 லட்சம் நிலமோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதற்கு காரணமான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேவூர் அருகே உள்ள அ. குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி ஷீலா தேவி (35). இவர் தனது 9 வயது மகளுடன் அ. குரும்பபாளையத்தில் வசித்து வருகிறார்.
இவர், கடந்த வாரம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான அ.குரும்பபாளையத்தில் 45 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ் என்பவரிடம் வைத்து பணம் வாங்கியதாகவும், பிறகு நிலத்தை விற்பனை செய்த வகையில் ரூ. 60 லட்சத்தை சிவராஜ் கொடுக்காமல் மோசடி செய்து வருவதாகவும் புகார் அளித்தார்.
இந்நிலையில், ஷீலா தேவி புதன்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணையில், ஷீலா தேவி தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த கடிதத்தில் தனக்கு ரூ. 60 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றிய திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சிவராஜ் (40), கதிர்வேல் (35) உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணத்தை பெற்று தனது மகளிடம் ஒப்படைக்குமாறும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜ் மற்றும் கதிர்வேலை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேவூர் அருகே உள்ள அ. குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி ஷீலா தேவி (35). இவர் தனது 9 வயது மகளுடன் அ. குரும்பபாளையத்தில் வசித்து வருகிறார்.
இவர், கடந்த வாரம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான அ.குரும்பபாளையத்தில் 45 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ் என்பவரிடம் வைத்து பணம் வாங்கியதாகவும், பிறகு நிலத்தை விற்பனை செய்த வகையில் ரூ. 60 லட்சத்தை சிவராஜ் கொடுக்காமல் மோசடி செய்து வருவதாகவும் புகார் அளித்தார்.
இந்நிலையில், ஷீலா தேவி புதன்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணையில், ஷீலா தேவி தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த கடிதத்தில் தனக்கு ரூ. 60 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றிய திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சிவராஜ் (40), கதிர்வேல் (35) உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணத்தை பெற்று தனது மகளிடம் ஒப்படைக்குமாறும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜ் மற்றும் கதிர்வேலை கைது செய்தனர்.