கிணத்துக்கடவு அருகே மேற்கூரை இடிந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..!

பழுதடைந்த கட்டிடங்கள் அருகில் பஸ்நிறுத்தம் உள்ளதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நிற்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.


கோவை: கிணத்துக்கடவு அருகே S.மேட்டுபாளையத்தில் மேற்கூரை இடிந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே S.மேட்டுப்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், ரேசன்கடை கட்டப்பட்டது.

இந்த அரசு கட்டிடங்கள் ஊருக்குள் இருந்ததால் பொதுமக்கள் எளிதில் ரேசன்கடைக்கும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் சென்று வந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த 2 கட்டிடங்களின் உள்ள ரேசன்கடை மேற்கூரை இடிந்து விழுந்தது.

அதேபோல, மற்றொரு பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் முன்பகுதியின் உள்ள மேற்கூரை கீழே விழுந்து அந்தரத்தில் தொங்குகிறது.

இந்நிலையில், தற்போது இரண்டு கட்டிடங்களும் பழுதடைந்துள்ளதால் இங்கிருந்த ரேசன்கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகமும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், பழுதடைந்த கட்டிடங்கள் அருகில் பள்ளிகளும், பஸ்நிறுத்தமும் உள்ளதால் இந்த பகுதியில் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் நிற்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்படும் நிலையில் உள்ளது.

எனவே, ஊருக்கு நடுவே உள்ள பழுதடைந்த 2 கட்டிடங்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு விரைந்து இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...