வனத்துறையினர் தினம்தோறும் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை வடவள்ளி அருகே ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி ஐஓபி காலனியில் கடந்த 22ம் தேதி மாலை 7.30 மணியளவில் 7 காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்துள்ளன. இந்த காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் நிலையில், தற்போது மாலை நேரத்திலேயே யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், யானைகளை கண்டால் அதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், யானைகள் மாலை நேரங்களிலேயே ஊருக்குள் வர துவங்கியிருப்பதால் அச்சமடைந்துள்ள அந்த பகுதி பொதுமக்கள், வனத்துறையினர் தினம்தோறும் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி ஐஓபி காலனியில் கடந்த 22ம் தேதி மாலை 7.30 மணியளவில் 7 காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்துள்ளன. இந்த காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் நிலையில், தற்போது மாலை நேரத்திலேயே யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், யானைகளை கண்டால் அதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், யானைகள் மாலை நேரங்களிலேயே ஊருக்குள் வர துவங்கியிருப்பதால் அச்சமடைந்துள்ள அந்த பகுதி பொதுமக்கள், வனத்துறையினர் தினம்தோறும் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.