கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டுறவுச் சங்கங்களில் தமிழக அரசால் கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடனில் முறையாக உரியக் காலத்தில் கடனை கட்டி புதுப்பித்த விவசாயிகளுக்குத் தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை.
கூட்டுறவுச் சங்கங்களில்காலங்காலமாகப் பயிர்க்கடன் பெற்று வந்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசு கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், முதலமைச்சர் உடனடியாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காலங்காலமாகக் கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று வந்த விவசாயிகள் உரிய நேரத்தில் அதிகாரிகள் கடனை கட்ட சொல்லி கெடுபிடி செய்ததால் கொரோனாகாலத்திலும் சிரமப்பட்டு முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டது.
ஆனால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பழைய கடனை புதுப்பிக்கப் பணம் செலுத்திய விவசாயிகளுக்குக் கூட்டுறவு அதிகாரிகள் செய்த குளறுபடியால் 40 சதவீத விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததில் சலுகை கிடைக்கவில்லை.
எனவேஅனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும்பயிர்க் கடன் கால அவகாசத்தை 31.1.2021வரை நீடிப்பு செய்துஅரசாணை வெளியிடத் தமிழக முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றுஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இல்லை என்றால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டுறவுச் சங்கங்களில் தமிழக அரசால் கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடனில் முறையாக உரியக் காலத்தில் கடனை கட்டி புதுப்பித்த விவசாயிகளுக்குத் தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை.
கூட்டுறவுச் சங்கங்களில்காலங்காலமாகப் பயிர்க்கடன் பெற்று வந்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசு கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், முதலமைச்சர் உடனடியாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காலங்காலமாகக் கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று வந்த விவசாயிகள் உரிய நேரத்தில் அதிகாரிகள் கடனை கட்ட சொல்லி கெடுபிடி செய்ததால் கொரோனாகாலத்திலும் சிரமப்பட்டு முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டது.
ஆனால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பழைய கடனை புதுப்பிக்கப் பணம் செலுத்திய விவசாயிகளுக்குக் கூட்டுறவு அதிகாரிகள் செய்த குளறுபடியால் 40 சதவீத விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததில் சலுகை கிடைக்கவில்லை.
எனவேஅனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும்பயிர்க் கடன் கால அவகாசத்தை 31.1.2021வரை நீடிப்பு செய்துஅரசாணை வெளியிடத் தமிழக முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றுஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இல்லை என்றால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.