கோவை ரோடு சந்தேகவுண்டன்பாளையம் அருகே இரு சக்கர வாகன டயர் வெடித்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
கோவை: கோவை ரோடு சந்தேகவுண்டன்பாளையம் அருகே இரு சக்கர வாகன டயர் வெடித்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (48) மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு கோவை ரோடு சந்தேகவுண்டன் பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரம் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தஇருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குருசாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (48) மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு கோவை ரோடு சந்தேகவுண்டன் பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரம் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தஇருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குருசாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.