கோவை தெற்கு மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிளை செயலாளர்கள் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி வார்டு செயலாளர்களுக்கான அமைப்பு தேர்தல் அரசம் பாளையம் பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கோவை: கிணத்துக்கடவு அரசம் பாளையம் பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை தெற்கு மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிளை செயலாளர்கள் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி வார்டு செயலாளர்களுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது.

மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 60 கிளை செயலாளருக்கும், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 கிளைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களைத் தேர்தல் ஆணையாளர் பனைமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமன் ஆகியோருடன் பெற்றுக்கொண்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இதேபோல் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் கிளை செயலாளர் தேர்தலுக்கு ஆணையாளரான இளவரசு ஆகியோரிடம் மனுத் தாக்கல் செய்தனர். 2 நாட்கள் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நாளை மாலை அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், அவைத்தலைவர் கனகராஜ், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் கண்ணம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை தெற்கு மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிளை செயலாளர்கள் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி வார்டு செயலாளர்களுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது.
மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 60 கிளை செயலாளருக்கும், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 கிளைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களைத் தேர்தல் ஆணையாளர் பனைமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமன் ஆகியோருடன் பெற்றுக்கொண்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இதேபோல் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் கிளை செயலாளர் தேர்தலுக்கு ஆணையாளரான இளவரசு ஆகியோரிடம் மனுத் தாக்கல் செய்தனர். 2 நாட்கள் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நாளை மாலை அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், அவைத்தலைவர் கனகராஜ், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் கண்ணம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.