பொள்ளாச்சி ஜெயராமன் மீது கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு..!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் சேருதல், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது, காவல்துறையிடம் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியது போன்ற 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி ஜெயராமன் மீது கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே கோதவாடி பகுதியில் உள்ள குளம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதை அடுத்து அங்கு நடந்த பொங்கல் விழாவிற்கு சென்ற பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதிமுக - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கோதவாடி குளம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க குருநல்லிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கோதவாடி அதிமுக கிளை செயலாளர் விநாயக மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாப்பு (எ) திருநாவுக்கரசு உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...