வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்..!! பொதுமக்கள் அச்சம்..!

காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்புகளை காட்டு யானைகள் இடித்துச் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்கோனா ரயான் சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு எஸ்டேட் பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித் திரிகிறது.

குறிப்பாக, இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அதிகாலை 4 மணி அளவில் சிங்கோனா 2/3 என்ற குடியிருப்பு பகுதியில் 7 காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து, அங்கு உள்ள செந்தில்குமார், செல்வி, சேகர், ராஜேந்திரன் ஆகியோரின் 4 வீடுகளின் ஜன்னல்களையும், கதவுகளையும் சுவர்களையும் இடித்து சேதப்படுத்தியது.



இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. மக்கள் அதிகாலை நேரங்களில் யானைகளை விரட்ட முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் தொலைத் தொடர்பு இல்லாததால் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கவும், பொதுமக்களை பாதுகாப்புக்கு அழைக்கவும் சிரமப்பட்டனர்.



இதனிடையே, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...