நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
நீலகிரி: நீலகிரியில் மலை பாதைகள் சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை செயல்படத் தொடங்கியது.
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான நூற்றாண்டு பழமைமிக்க இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை இரயில் போக்குவரத்து தடைப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த இரு மாதங்களாக பெய்து வந்த கன மழையால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான இரயில் மலை பாதைகளான கல்லார், ஹில்குரோ, ஆடர்லி போன்ற பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில்பாதை சேதமடைந்தது.
இதன் காரணமாக, மலை ரயில் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வந்த நிலையில் நவம்பர் 23ம் தேதி முதல் மலை ரயில் போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இதனிடையே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து சேவை தற்போது சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

அதன்படி, இன்று காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு 180 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான நூற்றாண்டு பழமைமிக்க இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை இரயில் போக்குவரத்து தடைப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த இரு மாதங்களாக பெய்து வந்த கன மழையால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான இரயில் மலை பாதைகளான கல்லார், ஹில்குரோ, ஆடர்லி போன்ற பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில்பாதை சேதமடைந்தது.
இதன் காரணமாக, மலை ரயில் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வந்த நிலையில் நவம்பர் 23ம் தேதி முதல் மலை ரயில் போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இதனிடையே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து சேவை தற்போது சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
அதன்படி, இன்று காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு 180 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.