பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பிக்கு, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள இடுவாயில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 14 ஆசிரியர்களில் 12 பேர் நிரந்தர ஆசிரியர்களாகவும், 2 பேர் பகுதிநேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக இடுவம்பாளையத்தை சேர்ந்த கீதா (45) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும், ஜாதிப்பெயரை சொல்லித் திட்டியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய வைத்தாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து மாணவ,மாணவிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேசிடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவ,மாணவிகளிடம், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் கீதாவிடம் விசாரணை நடந்தது.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதாவை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் எஸ்.பி. சசாங் சாய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள இடுவாயில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 14 ஆசிரியர்களில் 12 பேர் நிரந்தர ஆசிரியர்களாகவும், 2 பேர் பகுதிநேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக இடுவம்பாளையத்தை சேர்ந்த கீதா (45) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும், ஜாதிப்பெயரை சொல்லித் திட்டியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய வைத்தாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து மாணவ,மாணவிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேசிடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவ,மாணவிகளிடம், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் கீதாவிடம் விசாரணை நடந்தது.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதாவை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் எஸ்.பி. சசாங் சாய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.