கோவையில் வரும் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் விழாவில் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது..!

நவீன தமிழிலக்கியத்திற்கு செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளை கவுரவிக்கும் விதமாக ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: 2021ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், தெலுங்குக் கவிஞர் வடரேவு வீரபத்ருடு, இயக்குனர் வசந்த் எஸ். சாய், எழுத்தாளர் சோ.தருமன், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

நவீன தமிழிலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளை கவுரவிக்கும் விதமாக ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருதுச் சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ. 2,00,000/-விருதுத் தொகையும் உள்ளடக்கியது.

விருது பெறும் எழுத்தாளுமை பற்றிய ஆவணப்படமும், அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்படும். விருதாளரின் படைப்புகள் குறித்து இலக்கிய அமர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங் அரங்கத்தில் டிசம்பர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு நிகழ்வு தொடங்கும்.

கவிஞர் விக்ரமாதித்யன் பற்றிய விபரங்கள்:

கவிஞர் விக்ரமாதித்யன் 25/09/1947-ல் திருநெல்வேலியில் பிறந்தார். இவரது இயற்பெயர் நம்பிராஜன். இவர் சோதனை, அஸ்வினி, தராசு, நக்கீரன், இதயம் பேசுகிறது ஆகிய பத்திரிகைகளில் சில காலம் பணிபுரிந்தார். நவீன கவிதையில் தமிழ் மரபு சார்ந்த படிமங்களையும், தமிழ் மரபுக்குரிய மொழியோட்டத்தையும் கொண்டு வந்தவரென இவரைச் சொல்லலாம். இறுக்கமான படிமச்செறிவுக்கும், இசையற்ற கூற்றுமொழிக்கும் மாற்றாக இவரது கவிதைகள் விளங்கின. விளக்கு விருது, சாரல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

நூல்களின் பட்டியல்:-

ஆதி

கிரகயுத்தம்

கங்கோத்ரி

சொல்லிடில் எல்லை இல்லை

நூறு எண்ணுவதற்குள்

சாயல் எனப்படுவது யாதெனின்

சும்மா இருக்கவிடாத காற்று

கவிதையும் கத்தரிக்காயும்

அவன் அவள்

திருஉத்தரகோசமங்கை

ஊழ்

உள்வாங்கும் உலகம்

ஆகாசம் நீல நிறம்

மஹாகவிகள் ரதோற்சவம்

சேகர் சைக்கிள் ஷாப்

எழுத்து சொல் பொருள்

காடாறு மாதம் நாடாறு மாதம் - வரலாற்றுக் கட்டுரைகள்

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...