கேரளாவில் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி - வாளையாறு பகுதியில் தீவிர பரிசோதனை..!

பாதிக்கப்பட்ட உறவினர்களின் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் கேரளா - கோவை மாவட்ட எல்லையான வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கேரளாவில் 11 பேருக்கு 'ஒமைக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்த, 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட உறவினர்களின் மூலம் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதை கருத்தில் கொண்டு, கேரளா - கோவை மாவட்ட எல்லையான வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

'கேரளாவில் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் வாளையாறு பகுதியில் போலீஸ், வருவாய், சுகாதாரத்துறை சார்பில் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டு 'டோஸ்' செலுத்திய சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., 'நெகட்டிவ்' சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, கால்நடைத்துறை சார்பில், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...