கேரளாவில் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி - வாளையாறு பகுதியில் தீவிர பரிசோதனை..!

பாதிக்கப்பட்ட உறவினர்களின் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் கேரளா - கோவை மாவட்ட எல்லையான வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கேரளாவில் 11 பேருக்கு 'ஒமைக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்த, 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட உறவினர்களின் மூலம் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதை கருத்தில் கொண்டு, கேரளா - கோவை மாவட்ட எல்லையான வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

'கேரளாவில் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் வாளையாறு பகுதியில் போலீஸ், வருவாய், சுகாதாரத்துறை சார்பில் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டு 'டோஸ்' செலுத்திய சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., 'நெகட்டிவ்' சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, கால்நடைத்துறை சார்பில், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...