கோவை ஒண்டிப்புதூர் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை ஒண்டிப்புதூர் அடுத்த மீனாட்சி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிப்சன் என்பவரின் மகன் காட்வின் (29). திருமணமான இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சிறு வயது முதலே மூச்சுத் திணறல் நோய் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து அதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவருக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு அவரது மனைவி வேளாங்கண்ணி காட்விணும் பைக்கில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தனர். உக்கடம் வாலாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மயக்கம் வருவது போல இருப்பதாக காட்வின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வேளாங்கண்ணி தனது ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய காட்வின் தடுப்புச் சுவரை பிடித்து நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி காட்வின் குளத்தில் விழுந்தார். இதையடுத்து, அவரது மனைவி வேளாங்கண்ணி சத்தம் போட்டார்.

பின்னர், அருகில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் விழுந்து கிடந்த காட்வினை மீட்டனர். உடனே அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...