இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: கோவையில் 5 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், ரூ.23 லட்சம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
கேரள மாநில லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரி எனப்படும் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகளவில் நடக்கிறது. கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இவ்விற்பனையை தடுக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போத்தனூர் - குறிச்சி பிரிவு சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். கருப்பராயன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை விசாரித்தனர். அவர்கள், நல்லாம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம், காந்திபுரத்தில் மொபைல்போன் கடை நடத்தி வருவதும், உடனிருந்தது அவரது உதவியாளரான திருச்சியை சேர்ந்த பாண்டியராஜ், எனவும், அவர்களது காரில், 23 லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பதும் தெரிந்தது.
பின்னர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல், ஆன்லைன் லாட்டரி விற்று வருகிறார். இவருக்கு, ஒன்றரை ஆண்டுகளாக பாண்டியராஜ் உதவியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர்களிடமிருந்த ரொக்கம், லாட்டரி விற்பனையில் வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் நடேசன் வழக்கு பதிவு செய்து, ரொக்கம், 23 லட்சம், இன்னோவா கார் ஒன்று, மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கேரள மாநில லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரி எனப்படும் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகளவில் நடக்கிறது. கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இவ்விற்பனையை தடுக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போத்தனூர் - குறிச்சி பிரிவு சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். கருப்பராயன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை விசாரித்தனர். அவர்கள், நல்லாம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம், காந்திபுரத்தில் மொபைல்போன் கடை நடத்தி வருவதும், உடனிருந்தது அவரது உதவியாளரான திருச்சியை சேர்ந்த பாண்டியராஜ், எனவும், அவர்களது காரில், 23 லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பதும் தெரிந்தது.
பின்னர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல், ஆன்லைன் லாட்டரி விற்று வருகிறார். இவருக்கு, ஒன்றரை ஆண்டுகளாக பாண்டியராஜ் உதவியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர்களிடமிருந்த ரொக்கம், லாட்டரி விற்பனையில் வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் நடேசன் வழக்கு பதிவு செய்து, ரொக்கம், 23 லட்சம், இன்னோவா கார் ஒன்று, மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.