வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் கோவையில் மோசடி


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனம் இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி விட்டதாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர் லட்சுமியிடம் தேனியைச் சேர்ந்த ராஜா என்பவர் மனு அளித்துள்ளார். 

அம்மனுவில், கோவை மாவட்டம் சௌவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனத்தினர் ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தேனி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். 

இதற்காக 60 லட்சம் ரூபாய் வரை என்னைப் போன்று சுமார் 34-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இருந்து முன்தொகையாக பெற்று அதற்கு ரசீதும், சில ஆவனங்களையும் வழங்கினர். அவ்வாறு பணம் செலுத்தியவர்கள் மூன்று மாதத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவர் என அறிவித்தனர்.

இவ்வாறு பணம் செலுத்தி பல மாதம் கடந்தும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதுவிசயமாக விசாரிக்க வந்த போது மேற்குறிப்பிட்ட நிறுவனம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்களது அலைபேசியும் துண்டித்து வைத்துள்ளனர். 

இதனால், எங்களுக்கு அந்நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு எங்களது பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...