கோவையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் வெட்டி கொலை..! 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!!

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இரத்தினபுரி மற்றும் கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த குழுக்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் ஸ்ரீராம் என்கிற குரங்கு ஸ்ரீராம் (22), இவர் நேற்று இரவு 9 மணி அளவில் தனது நண்பர்கள் கவாஸ்கான் (23) உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் அருகே வந்தபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்களை வழிமறித்தது. இதில் அச்சம் அடைந்த அவர்கள் இருவரும் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.

இருப்பினும், அந்த கும்பல் அவர்களை 2 கிலோ மீட்டர் தூரம் வரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றது. இதில் ஒரு கோழி கடை அருகே ஸ்ரீராமை மடக்கிப் பிடித்த அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. மேலும் இந்த சம்பவத்தை கண்டதும் பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்தபடி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு கோவை தெற்கு காவல்துறை துணை ஆணையர் உமா, காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார், முத்தமிழ், உதவிஆய்வாளர் சரத்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இரத்தினபுரி மற்றும் கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த குழுக்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த கும்பல் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...