சசிகலாவிற்கு கட்சியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்


சசிகலாவிற்கு கட்சியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.கவின் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, முதலமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என நேரில் வலியுறுத்தி உள்ளேன். ஆட்சியும் கட்சி தலைமையும் ஓரே இடத்தில் இருக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருக்கின்றது. சசிகலா முதலமைச்சராக வர வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்துள்ளேன். 

மேலும், ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தாரோ அதை சசிகலாவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதால், தொண்டன் என்ற முறையில் சசிகலா ஆட்சிப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். 

சசிகலா முதலைமைச்சராவதற்கு கட்சியில் எவ்வித எதிர்ப்பும்  இல்லை. தொண்டர்களும் அவர் முதலமைச்சராவதையே விரும்புகின்றனர். சசிகலா முதலைமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும் தெரிவிக்கும் கருத்திற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் சொல்ல வேண்டும் என தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தி இருப்பது தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சியினர் அப்படித்தான் சொல்லுவார்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் அவரது தந்தையே கட்சி தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இருந்தபோது அது குறித்து கருத்து கூறினார்களா? என எதிர் கேள்வியெழுப்பினார்.

இதேபோல், நாடாளுமன்ற துணை சபாநாயகர் லெட்டர் பேடினை பயன்படுத்தி சசிகலாவிடம் கடிதம் கொடுத்துள்ளது தவறான நடவடிக்கை என்ற சர்ச்சைகள் குறித்தும் தீபா பேரவை துவங்கப்பட்டுள்ளது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தம்பிதுரை பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் சொந்த வேலையாக வந்துள்ளதாகவும் இன்று இரவே அவர் மீண்டும் சென்னை திரும்புவதாகவும் அ.தி.மு.க வினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...