மேம்பாலப்பணிக்காக உக்கடம் சலவைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் இடிப்பு

96-வீடுகள் இடிக்கப்பட்டு புல்லுக்காடு பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டு விட்டன. கோரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதால் அனைவரும் புதிய வீடுகளுக்குச் சென்று விட்டனர் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: மேம்பாலப்பணிக்காக உக்கடம் சலவைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டது.

கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் உக்கடம் பெரிய குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகளுக்காகவும், மேம்பாலப் பணிகளுக்காகவும் உக்கடம் சலவைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள 96-வீடுகளை அகற்ற மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு புல்லுக்காடு பகுதியில் வீடுகள் ஒதுக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், சலவைத் தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் இடம்பெயர மறுப்பு தெரிவித்து வந்தனர்.

தங்களது பகுதியில் துணிகளைத் துவைக்கவும், காய வைக்கவும் உள்ள வசதிகள் புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்ட இடங்களில் இல்லை, மாநகராட்சி இந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில் மத்திய மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அதிகாரி மணிவண்ணன் மற்றும் உக்கடம் போலீசார் சலவைத் தொழிலாளர் குடியிருப்புக்குச் சென்று பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக அங்கிருந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இங்கிருந்த 96 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் புல்லுக்காடு பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டு விட்டன. அவர்கள் கோரிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. கோரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதால் அனைவரும் புதிய வீடுகளுக்குச் சென்று விட்டனர். யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை, 'என்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...