பொள்ளாச்சி அருகே போலி உரம் தயாரிப்பு குடோன் கண்டுபிடிப்பு

பொள்ளாச்சி அருகே போலி உரம் தயாரிப்பு குடோன் கண்டுபிடிக்கப்பட்டு, அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மூட்டை மூட்டையாக 10-டன் உரம் பறிமுதல் செய்து வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே போலி உரம் தயாரிப்பு குடோன் கண்டுபிடிக்கப்பட்டு, அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் பகுதியில் தனியார் தோட்டத்தில் குடோன் அமைத்து போலி பொட்டாஷ் உரம் தயாரித்து வருவதாகப் பொள்ளாச்சி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் அரசகுமார் தலைமையிலான அதிகாரிகள் குடோனின் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குடோனின் போலி பொட்டாஷ் உரம் தயாரிப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குடோனில்இருந்த ஊழியர்களிடம்நடத்திய விசாரணையில், ராதாகிருஷ்ணன் என்பவரின் தோட்டத்தில் ஒரு பகுதியை தேவராஜ் என்பவர் வாடகைக்கு எடுத்து போலி பொட்டாஷ் உரம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.



பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த வேளாண்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உப்பு, கோலப்பொடி உள்ளிட்ட பொருட்களில் சிறிதளவு பொட்டாஷ் உரத்தைக் கலந்து "இந்தியன் பொட்டாஷ்" என்ற பெயரில் போலி உரம் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

தமிழகம் எங்கும் பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு நிலவுவதால் இதுபோல போலி உரம் தயாரிப்பவர்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே விவசாயிகள் போலி உரத்தை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

இதையடுத்து போலி உரம் தயாரித்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...