கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் கைவிடப்பட்ட 27 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் கைவிடப்பட்ட 27 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை வேண்டாம் என கருதும் பெற்றோர் சில நேரங்களில் சாலையோரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விட்டுச் செல்கின்றன.
குழந்தைகள் கைவிடப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப் படுகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட ஆதரவற்ற 18-குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட ஆதரவற்ற 9- குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் கூறியதாவது:-
திருமணமாகாமலேயே பிறக்கும் குழந்தைகள் ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என நினைப்போர் எங்களிடம் ஒப்படைக்கலாம். இவ்வாறு ஒப்படைப்பவரின் ஊரின் பெயர் விவரங்கள் வெளியே தெரியாது.
குழந்தையை ஒப்படைப்பதாக விரும்பிக் எழுதி கொடுத்தால் போதும் ஒப்படைக்கப்பட்ட குழந்தையை 60 நாட்களுக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
60 நாட்கள் கழித்து குழந்தையைக் கேட்க முடியாது அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது பிறக்கும் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என தெரிவித்தாள் மருத்துவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்து விடுவார்கள்.
பின்னர் பிறக்கும் குழந்தையை நாங்கள் சென்று பெற்றுக் கொள்வோம். இதைத்தொடர்ந்து தத்துவ மையத்திடம் குழந்தை ஒப்படைக்கப்படும் குழந்தையைத் தத்தெடுக்க ஆன்லைனில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை படி குழந்தை ஒப்படைக்கப்படும் என்றார்.
குழந்தை வேண்டாம் என கருதும் பெற்றோர் சில நேரங்களில் சாலையோரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விட்டுச் செல்கின்றன.
குழந்தைகள் கைவிடப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப் படுகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட ஆதரவற்ற 18-குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட ஆதரவற்ற 9- குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் கூறியதாவது:-
திருமணமாகாமலேயே பிறக்கும் குழந்தைகள் ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என நினைப்போர் எங்களிடம் ஒப்படைக்கலாம். இவ்வாறு ஒப்படைப்பவரின் ஊரின் பெயர் விவரங்கள் வெளியே தெரியாது.
குழந்தையை ஒப்படைப்பதாக விரும்பிக் எழுதி கொடுத்தால் போதும் ஒப்படைக்கப்பட்ட குழந்தையை 60 நாட்களுக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
60 நாட்கள் கழித்து குழந்தையைக் கேட்க முடியாது அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது பிறக்கும் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என தெரிவித்தாள் மருத்துவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்து விடுவார்கள்.
பின்னர் பிறக்கும் குழந்தையை நாங்கள் சென்று பெற்றுக் கொள்வோம். இதைத்தொடர்ந்து தத்துவ மையத்திடம் குழந்தை ஒப்படைக்கப்படும் குழந்தையைத் தத்தெடுக்க ஆன்லைனில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை படி குழந்தை ஒப்படைக்கப்படும் என்றார்.