கோவை நீலாம்புரில் மூன்று கல்லூரி மற்றும் அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்று மோதியதில் நான்கு மாணவர் உள்பட 6 பேர் காயம்..!

விபத்து குறித்து சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே நீலாம்பூரில்மூன்று கல்லூரி பேருந்துகளுக்கு பின்னால் வந்த அரசு பேருந்து பின்பக்கமாக மோதியதில், கல்லூரி வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டன. இதில் பேருந்தில், பயணம் செய்த 2 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி பேருந்துகள் இன்று மாலை கல்லூரியிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சூலூர், பல்லடம், திருப்பூர் ஆகிய இடங்களில் மாணவர்களை இறக்கி விடுவதற்காக சென்று கொண்டிருந்தன. அப்போது அவர்களுக்கு எதிர்திசையில் தவறான பாதையில் ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. இதனை பார்த்த பேருந்தின் ஓட்டுனர் இருசக்கர வாகனத்திற்கு வழிவிட, பேருந்தை இடதுபுறம் திருப்ப முற்பட்டபோது அங்கு ஒரு கண்டெய்னர் லாரி சாலையில் நின்று கொண்டிருந்ததால்,கல்லூரி பேருந்தின் ஓட்டுனர்திடீரென சாலையில் பேருந்தை நிறுத்தியுள்ளாதாக கூறப்படுகிறது.



இதனையடுத்து, அந்த பேருந்துக்குபின்னால் வந்த இரு கல்லூரி பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக திடீரென ப்ரேக் அடித்து நின்றன. அப்போது, அவ்வழியே அவிநாசிநோக்கி வந்த அரசுப்பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கடைசியாக நின்றிருந்த கல்லூரிப் பேருந்தின் பின்னால் மோதியது.

இதனால், நின்று கொண்டிருந்த மூன்று கல்லூரி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் அரசு பேருந்தில் சென்ற இரண்டு பயணிகள் மற்றும் கல்லூரிப் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.



இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற சூலூர் போலீசார் கல்லூரிப் பேருந்து மற்றும் அரசு பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்ப்படுத்தினர். விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவ - மாணவியர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்தார். சூலூர் போலீசார் இது சமந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...