கோவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்..!

நகர் ஊரமைப்புத் துறை தொடர்பான கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, திட்ட மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன.


கோவை: கோவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் நகர் ஊரமைப்புத் துறை தொடர்பான கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, திட்ட மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

கோவை அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள நகரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மனுக்களைப் பெற்று வருகிறார்.



அப்போது பேசிய அவர், வீட்டுவசதி துறையில் சில பிரச்சினைகள் இருப்பதை அறிந்து வைத்துள்ளதாகவும், அதனை சரி செய்ய சிங்கிள் விண்டோ சிஸ்டமே சரியாக இருக்கும் என பலரும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இது ஒரே நாளில் சாத்தியம் இல்லை எனக்கூறிய அவர், மனு கொடுப்போர் ஆதாரங்களை முழுமையாக வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார். அதிகாரிகள் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான அனைத்து ஆவணங்களையும் கேட்டுப்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இது போன்ற முகாம்களின் மூலம் இப்பிரச்னைகளை களைய முடியும் எனவும் தெரிவித்தார்.



மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும் எனவும், மக்கள் முழுமையான ஆவணங்களை கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி பேசினார்.

இந்த நிகழ்வில், வீட்டு வசதி வாரிய செயலாளர் மக்வானா, நகர்புற வளர்ச்சித்துறை இயக்குனர் சரவண வேல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, திமுக சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...