நகர் ஊரமைப்புத் துறை தொடர்பான கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, திட்ட மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன.
கோவை: கோவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் நகர் ஊரமைப்புத் துறை தொடர்பான கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, திட்ட மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
கோவை அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள நகரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மனுக்களைப் பெற்று வருகிறார்.

அப்போது பேசிய அவர், வீட்டுவசதி துறையில் சில பிரச்சினைகள் இருப்பதை அறிந்து வைத்துள்ளதாகவும், அதனை சரி செய்ய சிங்கிள் விண்டோ சிஸ்டமே சரியாக இருக்கும் என பலரும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இது ஒரே நாளில் சாத்தியம் இல்லை எனக்கூறிய அவர், மனு கொடுப்போர் ஆதாரங்களை முழுமையாக வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார். அதிகாரிகள் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான அனைத்து ஆவணங்களையும் கேட்டுப்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இது போன்ற முகாம்களின் மூலம் இப்பிரச்னைகளை களைய முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும் எனவும், மக்கள் முழுமையான ஆவணங்களை கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி பேசினார்.
இந்த நிகழ்வில், வீட்டு வசதி வாரிய செயலாளர் மக்வானா, நகர்புற வளர்ச்சித்துறை இயக்குனர் சரவண வேல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, திமுக சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள நகரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மனுக்களைப் பெற்று வருகிறார்.
அப்போது பேசிய அவர், வீட்டுவசதி துறையில் சில பிரச்சினைகள் இருப்பதை அறிந்து வைத்துள்ளதாகவும், அதனை சரி செய்ய சிங்கிள் விண்டோ சிஸ்டமே சரியாக இருக்கும் என பலரும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இது ஒரே நாளில் சாத்தியம் இல்லை எனக்கூறிய அவர், மனு கொடுப்போர் ஆதாரங்களை முழுமையாக வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார். அதிகாரிகள் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான அனைத்து ஆவணங்களையும் கேட்டுப்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இது போன்ற முகாம்களின் மூலம் இப்பிரச்னைகளை களைய முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும் எனவும், மக்கள் முழுமையான ஆவணங்களை கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி பேசினார்.
இந்த நிகழ்வில், வீட்டு வசதி வாரிய செயலாளர் மக்வானா, நகர்புற வளர்ச்சித்துறை இயக்குனர் சரவண வேல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, திமுக சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.