திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வரும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்துபல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வரும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப் புதூர் பகுதியில் சகுந்தலா என்பவர் குடியிருந்து வருகிறார். இவருக்குச் சொந்தமான வீடுகளை வடமாநில தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓடிஸாவைச் சேர்ந்த இளைஞர் இவரின் வீட்டில் அறை எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். வாடகை கொடுக்காத நிலையில் இரண்டு நாட்களாக வீடு பூட்டியே கிடந்துள்ளது. அருகே சென்று பார்த்த போது பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது.
இவரது புகாரையடுத்து திருப்பூர் மத்திய காவல் நிலையபோலீசார் விரைந்து வந்தனர்.பூட்டை உடைத்துப் பார்த்ததில் ஓடிஸாவைச் சேர்ந்த நாராயணி ஜீனா என்ற பெண் சடலமாகப் படுக்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது கழுத்தில் தூக்கிட்டு உயிரிழந்ததற்கான தழும்புகள் தெரிந்துள்ளது.
போலீசார் விசாரணையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை எழுந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நாரயணி ஜீனா தூக்கிட்டு தற்கொலை செய்தை அறிந்த அவரது கணவர் உடலை கீழே இறக்கி வைத்து விட்டு பயந்து போய் தப்பி ஓடினாரா? அல்லது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினாரா? என்ற கோணங்களில் விசாரணை செய்து வரும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப் புதூர் பகுதியில் சகுந்தலா என்பவர் குடியிருந்து வருகிறார். இவருக்குச் சொந்தமான வீடுகளை வடமாநில தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓடிஸாவைச் சேர்ந்த இளைஞர் இவரின் வீட்டில் அறை எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். வாடகை கொடுக்காத நிலையில் இரண்டு நாட்களாக வீடு பூட்டியே கிடந்துள்ளது. அருகே சென்று பார்த்த போது பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது.
இவரது புகாரையடுத்து திருப்பூர் மத்திய காவல் நிலையபோலீசார் விரைந்து வந்தனர்.பூட்டை உடைத்துப் பார்த்ததில் ஓடிஸாவைச் சேர்ந்த நாராயணி ஜீனா என்ற பெண் சடலமாகப் படுக்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது கழுத்தில் தூக்கிட்டு உயிரிழந்ததற்கான தழும்புகள் தெரிந்துள்ளது.
போலீசார் விசாரணையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை எழுந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நாரயணி ஜீனா தூக்கிட்டு தற்கொலை செய்தை அறிந்த அவரது கணவர் உடலை கீழே இறக்கி வைத்து விட்டு பயந்து போய் தப்பி ஓடினாரா? அல்லது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினாரா? என்ற கோணங்களில் விசாரணை செய்து வரும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.