மேலும், முதலமைச்சர் அறிவித்த ஊக்க தொகையையும் பெற்று தரும்படி முன்கள பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவையில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன்கள பணியாளர்களான தங்களுக்கு சம்பளம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு ஒரு மாத கால சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக பணியாற்றிய முன்கள பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடந்த மே மாதம் முதல் ஒப்பந்த பணியாளர்களாக மக்களிடம் உடல் நல விவரங்கள் சேகரிப்பு, தடுப்பூசி செலுத்துதல் ஆகிய வேலை பார்த்து வந்த நிலையில் அக்டோபர் மாதம் 31ம் தேதி பணி நிறைவுற்றதாகவும் ஆனால், அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பள பணத்தை வாங்கி தர வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், முதலமைச்சர் அறிவித்த ஊக்க தொகையையும் பெற்று தரும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு ஒரு மாத கால சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக பணியாற்றிய முன்கள பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடந்த மே மாதம் முதல் ஒப்பந்த பணியாளர்களாக மக்களிடம் உடல் நல விவரங்கள் சேகரிப்பு, தடுப்பூசி செலுத்துதல் ஆகிய வேலை பார்த்து வந்த நிலையில் அக்டோபர் மாதம் 31ம் தேதி பணி நிறைவுற்றதாகவும் ஆனால், அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பள பணத்தை வாங்கி தர வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், முதலமைச்சர் அறிவித்த ஊக்க தொகையையும் பெற்று தரும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.