தென்மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து ரயில்களை இயக்காமல், கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாக, ரயில்வே துறையை கண்டித்து 27 ஆம் தேதி போராட்டம்.
கோவை: கோவை - பொள்ளாச்சி அகல ரயில் பாதையை முழுமையாக பயன்படுத்தி தென்மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து ரயில்களை இயக்காமல், கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாக, ரயில்வே துறையை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
முதற்கட்டமாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வரும் 27ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர்கு.இராமகிருட்டிணன்: கோவை - திண்டுக்கல் ரயில் பாதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசு கோவை பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க மறுக்கின்றார்கள். தற்போது, கொண்டுவந்துள்ள திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க மறுத்து பாலக்காடு- திருச்செந்தூர் என்று அறிவித்திருப்பது, கோவை மக்களை வஞ்சிக்கும் செயல்.
இதனை கண்டிக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க வேண்டும், திருச்செந்தூர் ரயிலை கோவை வழியாக இயக்க வேண்டும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பாதைகளை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 27ம் தேதி அனைத்து கட்சிகளும் இணைந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் முதல்கட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ்,
தமுமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வரும் 27ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர்கு.இராமகிருட்டிணன்: கோவை - திண்டுக்கல் ரயில் பாதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசு கோவை பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க மறுக்கின்றார்கள். தற்போது, கொண்டுவந்துள்ள திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க மறுத்து பாலக்காடு- திருச்செந்தூர் என்று அறிவித்திருப்பது, கோவை மக்களை வஞ்சிக்கும் செயல்.
இதனை கண்டிக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க வேண்டும், திருச்செந்தூர் ரயிலை கோவை வழியாக இயக்க வேண்டும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பாதைகளை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 27ம் தேதி அனைத்து கட்சிகளும் இணைந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் முதல்கட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ்,
தமுமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் பங்கேற்றனர்.