மஞ்சூர் - கோவை சாலையில் யானை நடமாட்டம்: கவனமாகப் பயணிக்க வனத்துறை எச்சரிக்கை

மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


நீலகிரி: மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியிலிருந்து கெத்தை மலைப்பாதை வழியாகக் கோவைக்கு சாலை உள்ளது. இந்த சாலையானது மஞ்சூரிலிருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாகக் கோவைக்குச் செல்லும் பிரதான சாலை ஆகும்.

தினமும் காலை, மாலை வேளைகளில் அரசு பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. மஞ்சூர்- கோவை சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது.

இதனால் ஒரு வனப்பகுதியிலிருந்து மற்றொரு வனப்பகுதிக்கு இடம்பெயரும் வனவிலங்குகள் அந்த சாலையில் உலா வருவது வழக்கம். தற்போது இந்த சாலையில் இரண்டு குட்டிகளுடன் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

காலை மற்றும் மாலையிலேயே உலா வருகின்றன. அவ்வப்போது அரசு பேருந்துகள் உள்ளிட்டவற்றை மறிக்கின்றன. நேற்று இரவு கெத்தைக்குச் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து.



சிறிது நேரம் கழித்து வழிவிடவே பேருந்து புறப்பட்டுச் சென்றது. யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...