மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நீலகிரி: மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியிலிருந்து கெத்தை மலைப்பாதை வழியாகக் கோவைக்கு சாலை உள்ளது. இந்த சாலையானது மஞ்சூரிலிருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாகக் கோவைக்குச் செல்லும் பிரதான சாலை ஆகும்.
தினமும் காலை, மாலை வேளைகளில் அரசு பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. மஞ்சூர்- கோவை சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது.
இதனால் ஒரு வனப்பகுதியிலிருந்து மற்றொரு வனப்பகுதிக்கு இடம்பெயரும் வனவிலங்குகள் அந்த சாலையில் உலா வருவது வழக்கம். தற்போது இந்த சாலையில் இரண்டு குட்டிகளுடன் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
காலை மற்றும் மாலையிலேயே உலா வருகின்றன. அவ்வப்போது அரசு பேருந்துகள் உள்ளிட்டவற்றை மறிக்கின்றன. நேற்று இரவு கெத்தைக்குச் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து.

சிறிது நேரம் கழித்து வழிவிடவே பேருந்து புறப்பட்டுச் சென்றது. யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியிலிருந்து கெத்தை மலைப்பாதை வழியாகக் கோவைக்கு சாலை உள்ளது. இந்த சாலையானது மஞ்சூரிலிருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாகக் கோவைக்குச் செல்லும் பிரதான சாலை ஆகும்.
தினமும் காலை, மாலை வேளைகளில் அரசு பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. மஞ்சூர்- கோவை சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது.
இதனால் ஒரு வனப்பகுதியிலிருந்து மற்றொரு வனப்பகுதிக்கு இடம்பெயரும் வனவிலங்குகள் அந்த சாலையில் உலா வருவது வழக்கம். தற்போது இந்த சாலையில் இரண்டு குட்டிகளுடன் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
காலை மற்றும் மாலையிலேயே உலா வருகின்றன. அவ்வப்போது அரசு பேருந்துகள் உள்ளிட்டவற்றை மறிக்கின்றன. நேற்று இரவு கெத்தைக்குச் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து.
சிறிது நேரம் கழித்து வழிவிடவே பேருந்து புறப்பட்டுச் சென்றது. யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.