பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 700-கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3-பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 700-கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், போலீசார் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூர் கிராமம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனங்களில், கேரளாவுக்குக் கடத்த முயன்ற சுமார் 700-கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது.
பின்னர், ரேஷன் அரிசியைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்த பொள்ளாச்சி குப்புச்சாமி வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), அவரது மனைவிபத்மாவதி(50), அதே வீதியைச் சேர்ந்த குமரன் (48), குமரன் நகரைச் சேர்ந்த 16-வயது சிறுவன், ராஜா மில் ரோட்டை சேர்ந்த தனசேகரன் (28), கேரளா மாநிலம் சித்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(37), மற்றும் கேரளாவை சேர்ந்த தீபக் (21)ஆகிய 7- பேரையும் கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 5-இருசக்கர வாகனங்களையும், 700-கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், போலீசார் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூர் கிராமம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனங்களில், கேரளாவுக்குக் கடத்த முயன்ற சுமார் 700-கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது.
பின்னர், ரேஷன் அரிசியைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்த பொள்ளாச்சி குப்புச்சாமி வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), அவரது மனைவிபத்மாவதி(50), அதே வீதியைச் சேர்ந்த குமரன் (48), குமரன் நகரைச் சேர்ந்த 16-வயது சிறுவன், ராஜா மில் ரோட்டை சேர்ந்த தனசேகரன் (28), கேரளா மாநிலம் சித்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(37), மற்றும் கேரளாவை சேர்ந்த தீபக் (21)ஆகிய 7- பேரையும் கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 5-இருசக்கர வாகனங்களையும், 700-கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.