பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 700-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 700-கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3-பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 700-கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், போலீசார் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூர் கிராமம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனங்களில், கேரளாவுக்குக் கடத்த முயன்ற சுமார் 700-கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது.

பின்னர், ரேஷன் அரிசியைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்த பொள்ளாச்சி குப்புச்சாமி வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), அவரது மனைவிபத்மாவதி(50), அதே வீதியைச் சேர்ந்த குமரன் (48), குமரன் நகரைச் சேர்ந்த 16-வயது சிறுவன், ராஜா மில் ரோட்டை சேர்ந்த தனசேகரன் (28), கேரளா மாநிலம் சித்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(37), மற்றும் கேரளாவை சேர்ந்த தீபக் (21)ஆகிய 7- பேரையும் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 5-இருசக்கர வாகனங்களையும், 700-கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...