ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



அம்மனுவில், கோவை மாவட்டம், மயிலேரிபாளையம் கிராமம், பொள்ளாச்சி சாலையில் செயல்படும் டி டி கே பிரஷ்டீஜ் லிட் நிறுவனத்தில் ஊழியர்களான நாங்கள் சுமார் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்.

நிர்வாகம் நிர்ணயிக்கும் அளவிற்கு ஏற்றாற்போல் ஊழியர்களும் தரமான வகையில் சமையலுக்கு தேவையான குக்கர்களை தயாரித்துக் கொடுப்பதால் அதிக லாபத்துடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், எங்களுக்குரிய பணிகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்குரிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை. ஒசூரில் செயல்படும் எங்களது தலைமை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமமான பணி மூப்பு பணி அளவுகளை செய்து வரும் தொழிலாளர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதம் மட்டுமே எங்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. 

எங்களது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பலன் இல்லாததால் நாங்கள் பி எம் எஸ் என்னும் மிகப்பெரிய மத்திய தொழிற்சங்க அமைப்புடன் இணைக்கப்பட்ட பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து மனு அளித்துள்ளோம்.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தங்களுக்கு உரிய ஊதியம் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...