கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.


Coimbatore: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரித்திருந்தது. அதன்படி கோவையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை வேளையில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.






கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வேலை முடிந்து வீடுகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.




அதேபோன்று கோவை புறநகர் பகுதிகளான தடாகம் சாலை, இடையர்பாளையம், TVS நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. குறிப்பாக உக்கடம் பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு குளம் போன்று மழைநீர் தேங்கி நின்றதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானர்.




திடீர் மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மழை பெய்ததால் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைத்த நிலையில், வடிகால் வசதிகள் முறையாக இல்லாத பகுதிகளில் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...