12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். மண் பரிசோதனை செய்து உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடை மற்றும் பயிர் சாகுபடிக்காக மொத்தம் 12,522 மெட்ரிக் டன் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

இந்த மொத்த இருப்பில் யூரியா 3,176 மெட்ரிக் டன், டிஏபி 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,033 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் 4,513 மெட்ரிக் டன் ஆகியவை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொதுவாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தவும், அல்லது "தமிழ் மண் வள செயலி" பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்தவும் வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

உர விற்பனையாளர்கள், விவசாய நிலப்பரப்பு மற்றும் பயிர் தேவைக்கு ஏற்ப ஆதார் எண்ணை பதிவு செய்து மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயியின் கைப்பேசி எண் மற்றும் கையொப்பத்துடன் ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோனோ யூரியா, நோனோ டிஏபி, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் பயன்படுத்துவதன் மூலம் உர பயன்பாடு குறைந்து மண் வளம் அதிகரித்து, செலவும் குறையும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

உர விற்பனையில் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...