12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். மண் பரிசோதனை செய்து உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடை மற்றும் பயிர் சாகுபடிக்காக மொத்தம் 12,522 மெட்ரிக் டன் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

இந்த மொத்த இருப்பில் யூரியா 3,176 மெட்ரிக் டன், டிஏபி 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,033 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் 4,513 மெட்ரிக் டன் ஆகியவை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொதுவாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தவும், அல்லது "தமிழ் மண் வள செயலி" பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்தவும் வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

உர விற்பனையாளர்கள், விவசாய நிலப்பரப்பு மற்றும் பயிர் தேவைக்கு ஏற்ப ஆதார் எண்ணை பதிவு செய்து மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயியின் கைப்பேசி எண் மற்றும் கையொப்பத்துடன் ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோனோ யூரியா, நோனோ டிஏபி, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் பயன்படுத்துவதன் மூலம் உர பயன்பாடு குறைந்து மண் வளம் அதிகரித்து, செலவும் குறையும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

உர விற்பனையில் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...