கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் பயணம் முடிந்து அந்தந்த எல்லைக்குட்பட்ட டிப்போக்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று இரவு சிங்காநல்லூரிலிருந்து ஒண்டிபுதூர் டிப்போவிற்கு இரண்டாம் நம்பர் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது மதுபோதையில் பேருந்தில் ஏறிய மூன்று பேர் நடத்துனரிடம் தகராற்றில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்தை சூலூருக்கு இயக்கும்படி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பேருந்து நடத்துனர் பேருந்து வேறு எங்கும் செல்லாது, டிப்போவுக்கு செல்கிறது என தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இருவர் நடத்துனர் கவியரசன் மீது தாங்கள் வைத்திருந்த கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் பேருந்திலிருந்து தப்பித்துச் சென்றனர்.
பின்னர் நடத்துனர் கவியரசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் குற்றவாளியை விரைந்து பிடிக்கும்படி சிங்காநல்லூரில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் சிங்காநல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து நடத்துனரை தாக்கிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் பயணம் முடிந்து அந்தந்த எல்லைக்குட்பட்ட டிப்போக்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று இரவு சிங்காநல்லூரிலிருந்து ஒண்டிபுதூர் டிப்போவிற்கு இரண்டாம் நம்பர் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது மதுபோதையில் பேருந்தில் ஏறிய மூன்று பேர் நடத்துனரிடம் தகராற்றில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்தை சூலூருக்கு இயக்கும்படி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பேருந்து நடத்துனர் பேருந்து வேறு எங்கும் செல்லாது, டிப்போவுக்கு செல்கிறது என தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இருவர் நடத்துனர் கவியரசன் மீது தாங்கள் வைத்திருந்த கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் பேருந்திலிருந்து தப்பித்துச் சென்றனர்.
பின்னர் நடத்துனர் கவியரசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் குற்றவாளியை விரைந்து பிடிக்கும்படி சிங்காநல்லூரில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் சிங்காநல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து நடத்துனரை தாக்கிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.