சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக அகலப்படுத்த வேண்டும்- கிணத்துக்கடவில் தீர்மானம் நிறைவேற்றம்

சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக அகலப்படுத்த வேண்டி, கிணத்துக்கடவில் நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக அகலப்படுத்த வேண்டி, கிணத்துக்கடவில் நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் இன்று கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பொது செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்பு (எ) கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும், அண்ணாநகர் பகுதியிலிருந்து பகவதி பாளையம் செல்லும் சாலையைப் புதுப்பிக்க வேண்டும், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக மாற்றி அகலப்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி பார்வையாளர் சாந்தகுமார், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் ராமகிருஷ்ண மூர்த்தி, மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய பொதுச்செயலாளர் சுந்தர்ராஜு உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...