சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக அகலப்படுத்த வேண்டி, கிணத்துக்கடவில் நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக அகலப்படுத்த வேண்டி, கிணத்துக்கடவில் நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் இன்று கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பொது செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்பு (எ) கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும், அண்ணாநகர் பகுதியிலிருந்து பகவதி பாளையம் செல்லும் சாலையைப் புதுப்பிக்க வேண்டும், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக மாற்றி அகலப்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி பார்வையாளர் சாந்தகுமார், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் ராமகிருஷ்ண மூர்த்தி, மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய பொதுச்செயலாளர் சுந்தர்ராஜு உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் இன்று கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பொது செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்பு (எ) கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும், அண்ணாநகர் பகுதியிலிருந்து பகவதி பாளையம் செல்லும் சாலையைப் புதுப்பிக்க வேண்டும், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக மாற்றி அகலப்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி பார்வையாளர் சாந்தகுமார், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் ராமகிருஷ்ண மூர்த்தி, மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய பொதுச்செயலாளர் சுந்தர்ராஜு உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.