பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல் பாளையத்தில் விவசாய தோட்டத்தில் பாதுகாப்பில்லாமல் அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்த 1308-ஜெலட்டின் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரை கைது செய்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல் பாளையத்தில் விவசாய தோட்டத்தில் பாதுகாப்பில்லாமல் அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்த 1308-ஜெலட்டின் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரை கைது செய்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல் பாளையம்- பழையூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் ஜெலட்டின் உள்ளிட்ட வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்செல்வநாகரத்தினத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் பொள்ளாச்சி காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் கோமங்கலம் போலீசார் பழையூர் பகுதியில் விஜய்பாபு என்பவரது தோட்டத்தில் சோதனையிட்டனர். அப்போது மோட்டார் அறையில் அட்டைப் பெட்டிகளில் ஜெலடின் வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 1308-ஜெலட்டின் வெடிபொருட்களைப்பறிமுதல் செய்த போலீசார் கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, கனகராஜ், விஜய்பாபு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் வெடிபொருட்களை வைத்திருப்பதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கல்குவாரிகளுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல் பாளையம்- பழையூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் ஜெலட்டின் உள்ளிட்ட வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்செல்வநாகரத்தினத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் பொள்ளாச்சி காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் கோமங்கலம் போலீசார் பழையூர் பகுதியில் விஜய்பாபு என்பவரது தோட்டத்தில் சோதனையிட்டனர். அப்போது மோட்டார் அறையில் அட்டைப் பெட்டிகளில் ஜெலடின் வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 1308-ஜெலட்டின் வெடிபொருட்களைப்பறிமுதல் செய்த போலீசார் கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, கனகராஜ், விஜய்பாபு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் வெடிபொருட்களை வைத்திருப்பதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கல்குவாரிகளுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.