கோவை மாநகராட்சியைப் பொறுத்த வரை குப்பைகளை எடுப்பது என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது. ஒரு மாத காலத்தில் அதனைச் செய்யவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்திற்குப் பிறகு அரசின் வழக்கமான செயல்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் காயர் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் சிறு-குறு காயர் தொழில் நிறுவனங்களில் ஆளும் கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் குறிப்பாக அமைச்சர்கள் பெயரைக் குறிப்பிட்டு வசூல் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன.
இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கத் தயங்குகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். பணம் வசூலிப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஜனவரி முதல் கைத்தறி ரகங்களுக்கு 12% ஜி.எஸ்.டி அதிகரிப்பதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதற்கு விலக்களிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக மத்திய மாநில நிதி அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். தமிழக முதல்வரும் இந்த கோரிக்கையைத் தமிழக நிதி அமைச்சர் மூலம் வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டும். கோவை மாநகராட்சியைப் பொறுத்த வரை குப்பைகளை எடுப்பது என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் மக்கள் இந்த பிரச்சனையைத் தான் முன் வைக்கின்றனர். சாலைகளைக் கூடிய விரைவில்சரிசெய்வதாகக் கூறியுள்ளார்கள். ஒரு மாத காலத்தில் அதனைச் செய்யவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.
கேரளா பாஜக ஓபிசி செயலாளர் படுகொலை பற்றி பேசிய அவர் கேரளாவில் மத தீவிரவாதத்தை வளர்க்கக் கூடிய குழுக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க கூடிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் தற்போது படுகொலை நிகழ்ந்து வருகிறது.
இந்த படுகொலைகளை NIA விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இந்த கொலைகளை அந்நிய நாட்டில் திட்டமிட்டுச் செய்யப்படக் கூடிய படுகொலைகளாக நாங்கள் பார்க்கிறோம். எனவே மாநில அரசாங்கம் இதனை கண்டறிவரை விட்டுவிட்டு NIA விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்திற்குப் பிறகு அரசின் வழக்கமான செயல்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் காயர் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் சிறு-குறு காயர் தொழில் நிறுவனங்களில் ஆளும் கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் குறிப்பாக அமைச்சர்கள் பெயரைக் குறிப்பிட்டு வசூல் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன.
இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கத் தயங்குகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். பணம் வசூலிப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஜனவரி முதல் கைத்தறி ரகங்களுக்கு 12% ஜி.எஸ்.டி அதிகரிப்பதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதற்கு விலக்களிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக மத்திய மாநில நிதி அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். தமிழக முதல்வரும் இந்த கோரிக்கையைத் தமிழக நிதி அமைச்சர் மூலம் வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டும். கோவை மாநகராட்சியைப் பொறுத்த வரை குப்பைகளை எடுப்பது என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் மக்கள் இந்த பிரச்சனையைத் தான் முன் வைக்கின்றனர். சாலைகளைக் கூடிய விரைவில்சரிசெய்வதாகக் கூறியுள்ளார்கள். ஒரு மாத காலத்தில் அதனைச் செய்யவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.
கேரளா பாஜக ஓபிசி செயலாளர் படுகொலை பற்றி பேசிய அவர் கேரளாவில் மத தீவிரவாதத்தை வளர்க்கக் கூடிய குழுக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க கூடிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் தற்போது படுகொலை நிகழ்ந்து வருகிறது.
இந்த படுகொலைகளை NIA விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இந்த கொலைகளை அந்நிய நாட்டில் திட்டமிட்டுச் செய்யப்படக் கூடிய படுகொலைகளாக நாங்கள் பார்க்கிறோம். எனவே மாநில அரசாங்கம் இதனை கண்டறிவரை விட்டுவிட்டு NIA விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.