குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இரு கரடிகளால் மக்கள் அச்சம்

அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சின்ன உபதலை பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் உணவிற்காக புகுந்த கரடிகளால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் சின்ன உபதலைப் பகுதியைச் சுற்றிலும் உள்ள வனப் பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில், சின்ன உபதலைப் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு வந்த இரண்டு கரடிகள் அங்கேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்தன. சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்த போது வீட்டின் அருகி் இருந்து ஒரு கரடி ஓடியதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக கதவை மூடி தப்பித்தார்.

பின்னர், எதிரில் மற்றொரு கரடியும் இதனுடன் சேர்ந்துக் கொண்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி வந்தன. இதன் காரணமாக, குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.

அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன் கரடிகளை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...