உலக தமிழ்ப்‌ பண்பாட்டு மையம்‌ விருதுகள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ நூல்‌ வெளியீட்டு விழா..!

இந்த நிகழ்வில்‌ டாக்டர்‌ என்‌.ஜி.பி. கல்விக்‌ குழுமங்களின்‌ செயலர்‌ மருத்துவர்‌ தவமணிதேவி பழனிசாமி அவர்கள்‌ வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார்‌.


கோவை: உலக‌ தமிழ்ப்‌ பண்பாட்டு மையத்தின்‌ சார்பில்‌ விருதுகள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ நூல்‌ வெளியீட்டு விழா இன்று காலை 10 மணியளவில் டாக்டர்‌ என்‌.ஜி.பி கலையரங்கத்தில்‌ நடைபெற்றது.

இந்த நிகழ்வில்‌ டாக்டர்‌ என்‌.ஜி.பி. கல்விக்‌ குழுமங்களின்‌ செயலர்‌ மருத்துவர்‌ தவமணிதேவி பழனிசாமி அவர்கள்‌ வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார்‌. உலகத்‌ தமிழ்ப்‌ பண்பாட்டு மையத்தின்‌ தலைவர்‌ மருத்துவர்‌ நல்ல பழனிசாமி அவர்கள்‌ இவ்விழாவிற்கு தலைமையேற்று நூல்களை வெளியிட்டு சிறப்பு செய்தார்‌.

உலகத்‌ தமிழ்ப்‌ பண்பாட்டு மையத்தின்‌ செயலர்‌ முனைவர்‌ சிற்பி பாலசுப்ரமணியம்‌ அவர்கள்‌ விருது பெரும்‌ விருதாளர்களைப்‌ பற்றிய அறிமுகவரையாற்றிச்‌ சிறப்பித்தார்‌.



இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்‌ மேனாள்‌ இயக்குனர்‌ பத்மஸ்ரீ முனைவர்‌ மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்‌ விருதுகளை வழங்கினார்‌.

உ.வே.சா. தமிழறிஞர்‌ விருது முனைவர்‌ இ.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்‌, பெரியசாமித்தூரன்‌ தமிழ்ப்‌ படைப்பாளர்‌ விருது எழுத்தாளர்‌ ச.பாலமுருகன்‌ அவர்களுக்கும்‌, டாக்டர்‌ நல்ல பழனிசாமி பிறதுறைத்‌ தமிழ்த்‌ தொண்டர்‌ விருது முனைவர்‌ சா.பாலுசாமி அவர்களுக்கும்‌ வழங்கப்பட்டது.

சிறப்பு விருதுகள்‌ பேராசிரியர்‌ ப.அருளி, எழுத்தாளர்‌ சூர்யகாந்தன்‌, எழுத்தாளர்‌ தமிழ்‌ மகன்‌ ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மருத்துவர்‌ இராஜேந்திரன்‌ அவர்கள்‌ எழுதிய தாய்‌-சேய்க்கான சத்தான உணவுகள்‌ நூலை மருத்துவர்‌ செ.சதாசிவம்‌ அவர்கள்‌ அறிமுகம்‌ செய்தார்‌.

முனைவர்‌ பெ.இரா.முத்துசாமி அவர்கள்‌ இளைஞர்களுக்கான வாழ்க்கைத்‌ திறன்கள்‌ நூலை அறிமுகம்‌ செய்தார்‌. இயகாகோ என்‌.சுப்ரமணியம்‌ அவர்கள்‌ தமிழோசை மாணவர்‌ இதழை அறிமுகம்‌ செய்தார்‌. முனைவர்‌ இ.சுந்தரமூர்த்தி, எழுத்தாளர்‌ ச.பாலமுருகன்‌, முனைவர்‌ சா.பாலுசாமி ஆகியோர்‌ மகிழ்வுரை வழங்கினர்.

உலகத்‌ தமிழ்ப்‌ பண்பாட்டு மையத்தின்‌ மதியுரைஞர்‌ முனைவர்‌ பெ.இரா.முத்துசாமி அவர்கள்‌ நன்றியுரை வழங்கினார்‌. நாட்டுப்பண்ணுடன்‌ விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...