கோவையில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக புகார்..!! லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

அதிகாரிகள் விசாரணையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்து அதற்கான பணத்தை கட்டவில்லை எனவும் இருப்பில் இந்த பொருட்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது.


கோவை: கோவையில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கோவை பச்சாம்பாளையத்தில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகம் ஆர்.எஸ். புரம் லாரி ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவின் தயாரிப்புகளான நெய் இனிப்பு வகைகள் ஆகியவை விற்பனை செய்வதில் 60 லட்சம் வரையும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

குறிப்பாக கோவை ஆவின் நிறுவனத்தின் ஊழல் முறைகேடு, விற்பனை சரிவு குறித்து ஊழியர்கள் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் ஆவின் ஆணையருக்கு தெரிவித்தனர். மேலும், விற்பனை பிரிவு மேலாளர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆவின் ஆணையர் டாக்டர் சுப்பையா உத்தரவின் பெயரில் சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட ஆவின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று கோவை ஆர்.எஸ். புரம் லாலி ரோட்டில் உள்ள மார்க்கெட்டிங் அலுவலகத்துக்குச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்த ஆவணங்கள் இருப்பில் உள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். மேலும் பச்சாம்பாளையம் நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர்.

காலை முதல் இரவு வரை ஆர்.எஸ். புரம் மற்றும் பச்சாம்பாளையம் ஆவின் முறைகேடு நடந்துள்ளதா என்பது தொடர்பான விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா விற்பனை அலுவலர் சுப்பிரமணியம், ஜீவிதா, சாமிநாதன் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.

அதிகாரிகள் விசாரணையில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்து அதற்கான பணத்தை கட்டவில்லை எனவும் இருப்பில் இந்த பொருட்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...