தொழிற்கூட பிரிவில் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரம் தவிர, ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைய பயிற்சி பெற்றுள்ளார்.
கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி வரைந்த ஓவியம் தேசிய அளவிலான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை தினத்தை அனுசரிக்கும் பொருட்டு, 'டிங்கா டிங்கா இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சிறைத்துறை ஊழியர்கள், கைதிகளுக்கு போட்டி நடத்தி பரிசு வழங்குகிறது.
இந்தாண்டு, ஓவியம், சிறப்பு நிபுணத்துவம் மற்றும் சிறை நிர்வாகம் என்ற தலைப்புகளில் இணைய வழியில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை சிறை கைதி பிரபு (42) ஓவியப் போட்டியில் பங்கேற்றார்.
'சிறைகளில் டெலிபோன்' என்ற தலைப்பில் நடந்த ஓவியப்போட்டியில் பங்கேற்ற அவர், தேசிய அளவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். ஆயுள் தண்டனை கைதியான பிரபு, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐந்து ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
தொழிற்கூட பிரிவில் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரம் தவிர, ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைய பயிற்சி பெற்றுள்ளார். பிரபுவை, சிறைத்துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம், கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.
ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை தினத்தை அனுசரிக்கும் பொருட்டு, 'டிங்கா டிங்கா இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சிறைத்துறை ஊழியர்கள், கைதிகளுக்கு போட்டி நடத்தி பரிசு வழங்குகிறது.
இந்தாண்டு, ஓவியம், சிறப்பு நிபுணத்துவம் மற்றும் சிறை நிர்வாகம் என்ற தலைப்புகளில் இணைய வழியில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை சிறை கைதி பிரபு (42) ஓவியப் போட்டியில் பங்கேற்றார்.
'சிறைகளில் டெலிபோன்' என்ற தலைப்பில் நடந்த ஓவியப்போட்டியில் பங்கேற்ற அவர், தேசிய அளவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். ஆயுள் தண்டனை கைதியான பிரபு, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐந்து ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
தொழிற்கூட பிரிவில் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரம் தவிர, ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைய பயிற்சி பெற்றுள்ளார். பிரபுவை, சிறைத்துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம், கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.