கோவையில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என 1,386 பள்ளியின் கட்டிடங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை: நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்திலும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளின் வகுப்பறைகள், இட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விட்டோம். இந்த நிலையில் தற்போது அறிவிப்பு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 2065 பள்ளிகள் உள்ளது.
இதில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என 1386 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த பள்ளியின் கட்டிடங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்திலும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளின் வகுப்பறைகள், இட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விட்டோம். இந்த நிலையில் தற்போது அறிவிப்பு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 2065 பள்ளிகள் உள்ளது.
இதில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என 1386 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த பள்ளியின் கட்டிடங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.