நெல்லையில் பள்ளி சுவர் இடிந்ததில் 3 மாணவர்கள் இறப்பு எதிரொலி: கோவை மாவட்டத்தில் 1386 பள்ளிகளில் ஆய்வு..!

கோவையில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என 1,386 பள்ளியின் கட்டிடங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை: நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்திலும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளின் வகுப்பறைகள், இட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விட்டோம். இந்த நிலையில் தற்போது அறிவிப்பு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 2065 பள்ளிகள் உள்ளது.

இதில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என 1386 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த பள்ளியின் கட்டிடங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...