கோவை மாநகராட்சியில் கடந்த 8 மாதங்களில் ரூ.121 கோடி வரி வசூல்..!

மேலும், மீதமுள்ள ரூ.252 கோடியை இந்த நிதியாண்டிலேயே வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 8 மாதங்களில் மாநகராட்சியில் 121 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி விதிப்பு இனங்கள் உள்ளன.

நடப்பு 2021 - 22 ஆம் நிதியாண்டில் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு தொகை இரண்டும் சேர்த்து மொத்தம் ரூபாய் 373 கோடி வரை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் ரூ.121 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது:-

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 100 சதவீத வரி விதிப்பு என்பதே இலக்காக உள்ளது. கடந்த நிதி ஆண்டில் கொரோனா தாக்கம் உள்ளிட்ட காரணங்களினால் 93 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் முழு இலக்கை எட்ட கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரை நிதியாண்டில் முடிந்ததிலிருந்து வரிவசூல் வேகப்படுத்தி உள்ளோம்.

இதற்காக வரி வசூலிப்பு மையங்களில் தேவையான நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரித் தொகை நிலுவை உள்ளவர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களில் சுமார் 121 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 33 சதவீதம் ஆகும்.

மேலும், மீதமுள்ள ரூபாய் 252 கோடியை இந்த நிதியாண்டிலேயே வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...