மேலும், கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சிறப்பு துப்புரவு பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் உக்கடம் கலைக்கூடம், ஸ்ட்ரீட் ஆட் ஆப் இண்டியா பவுண்டேசன் சார்பில் சுவரோவியங்கள் நிறைவு விழா பணியினை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டு துவங்கி வைத்தார்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2020ம் ஆண்டு ஸ்ட்ரீட் ஆர்ட் ஆஃப் இந்தியா பவுண்டேசன் உக்கடம் கலைக் கூடத்தைத் தொடங்கியது. இந்த திறந்தவெளி கலைக்கூடம் தேசிய மற்றும் சர்வதேச சுவைஞர்களின் 5 சுவரோவியங்களுடன் தொடங்கியது.
இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் 5 கூடுதல் சுவரோவியங்கள் வரைய ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே கலைக்கூடத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு துவங்கி வைத்தார்.
பின்னர், கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சிறப்பு துப்புரவு பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப, துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.