கிணத்துக்கடவு கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கேரளாவில் பறவைக்காய்ச்சல் அதிகரிப்பு எதிரொலியால் கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரளா எல்லையில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் அண்மைக்காலமாக பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது.
அதன்படி, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவக் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் கோழி, கோழித் தீவனம், முட்டை போன்ற பறவைகள் சம்பந்தமாக வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.
மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கிருமி நாசினி தெளித்து பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
கிணத்துக்கடவு கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் அண்மைக்காலமாக பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது.
அதன்படி, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவக் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் கோழி, கோழித் தீவனம், முட்டை போன்ற பறவைகள் சம்பந்தமாக வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.
மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கிருமி நாசினி தெளித்து பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
கிணத்துக்கடவு கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.